Tuesday, May 12, 2009

புது வருஷமும் விரதமும்

ரொம்ப நாளா 2009 புது வருஷம் கொண்டாடினதை எழுதனும்னு நினைச்சு இன்னைக்கு தான் நேரம் அமைஞ்சிருக்கு.

டிசம்பர் மூணாவது வாரத்திலேயே எப்படி கொண்டாடறதுனு முடிவாயிடுச்சு.ஷார்ஜாவில் உள்ள சொந்தக்கார குடும்பங்கள் புதன் கிழமையே துபாய் வந்து வியாழன் புது வருஷத்தன்னைக்கு அபுதாபி போகலாம்னு.வியாழக்கிழமை மட்டும் தான் நமக்கு சைவம்,புது வருஷம் அன்னைக்கு தான் வரணுமா?

நாம தான் ஒரு நாள் மட்டும் சைவம்னா மிச்சவங்க எப்பவுமே சுத்த அசைவம்.புதன் கிழமையே எங்களுக்கு கொஞ்சம் புளியோதரையும்,எழமிச்சை சாதமும் மத்தவங்களுக்கு மட்டனையும் சிக்கனையும் வறுவல் பண்ணிட்டேன்.எல்லாம் தயார் பண்ணி நாங்களும் தயாராகி ரெண்டு காரில் அபுதாபிக்கு புறப்பட்டாச்சு.

அங்க நாலு குடும்பங்கள் இருக்கு..எல்லாரும் சேர்ந்து லூலூ ஐலேண்ட் போயி கடலில் போட்டிங், விளையாட்டு, குளியல்னு பிளான் பண்ணி போனோம்.அவங்களையும் சந்திச்சு வாழ்த்துக்களையும் பரிமாறிகிட்டு ரங்கமணிகங்க எல்லாம் ஐலேண்ட் போறதுக்கு டிக்கெட் வாங்க போனா ஒரு ஈ காக்கா கூட அங்க இல்லை.ஒரே ஏமாற்றம், இனி எங்க போறதுனு குழப்பம் வேற.கடைசியில் அபுதாபி ஏர்போர்ட் பார்க் போகலாம்னு முடிவு பண்ணி ஆறு காரில் கிளம்பினோம்.



பார்க்குகுள்ளே போயி நல்லா இடமா பார்த்து கொண்டு வந்த பொருளையெல்லாம் எடுத்து வெச்சோம்.அதில் மூணு குடும்பம் பார்பிக்யூ பண்ண சிக்கனை மசாலாவில் கலந்து எடுத்து வந்திருந்தாங்க. அதனுடைய படங்கள் கீழே.சிக்கனுடன் சாப்பிட அரபிக் ரொட்டியும், பூண்டு பேஸ்ட்டும், சன்னா (ஹம்மூஸ்)பேஸ்ட்டும் இருந்தது.நாம சாப்பிடாத போது தான் எல்லாரும் விதவிதமா சமைப்பாங்க போலிருக்கு.





கிரிக்கெட்,அந்தாக்க்ஷரி,கண்கட்டு விளையாட்டு எல்லாம் முடிச்சிட்டு சாப்பிடலாம்னு உட்கார்ந்தா புளியோதரையும் எழமிச்சை சாதமும் ஐஸ் மாதிரியாயிடுச்சு..அப்புறம் எங்க சாப்பிடறது??? பசி தாங்கமுடியலை அதோட அவங்க கிண்டல் வேற, என்ன பண்றது அவங்க சாப்பிடறதை வேடிக்கை மட்டும் பார்த்தோம்.ஏழு மணி வரைக்கும் இருந்துட்டு அவவங்க வீட்டுக்கு கிளம்பினோம். போற வழியில் ச்சீஸ் ரோல் வாங்கி சாப்பிட்டுட்டு பசியை கொஞ்சம் ஆத்தினோம்.

இப்படி பசியோட கொண்டாடின முதல் நியூ இயர் இது தான்.வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற மாலில் மெக்சிகன் டேன்ஸையும் பார்த்துட்டு நியூ இயர் கொண்டாட்டத்தை முடிச்சோம்.


Tamil Top Blogs