Monday, March 22, 2010

யோகா TO தியானம்

Tamil Top Blogs

யோகா பத்தி முன்னமே ஒரு பதிவு போட்டிருந்தேன்...அதனுடைய தொடர்ச்சி பதிவு இது.

ரெண்டாவதா வந்த யோகா டீச்சரை பாக்கற வரை எங்க எல்லாருக்கும் ஒரு டென்ஷன் இருந்தது..அந்த மாதிரி பில்டப்போட இவங்களும் இருப்பாங்களோனு.ஆனா பாத்தவுடனே அந்த எண்ணம் எல்லாம் பறந்திருச்சு..பின்ன 13 வருஷம் யோகா டீச்சராம் அதுக்கு முன்ன நாலு வருஷம் யோகா படிச்சாங்களாம்..முதல்ல விவேகானந்தா யோகா ,பதஞ்சலி யோகா இப்ப லேட்டஸ்டா ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யோகாவும் கத்துகிட்டாங்களாம்.

நிறைகுடம் தளும்பாதுன்னு இவங்களையும் பாத்து தெரிஞ்சுகிட்டேன்.முதல் பதினைஞ்சு நாள் உடம்பை இலகுவாக்க பயிற்சிகள தான் சொல்லி குடுத்தாங்க..அது கூடவே தினமும் இருபது நிமிஷ தியானமும் இருந்துச்சு.ஒரு மணி நேரந்தான்னு சொல்லிட்டு தினமும் ரெண்டு மணி நேர கிளாஸ் நடந்துச்சு.கூடவே எங்ககிட்ட வாங்கற பணமும் சேரிட்டிக்கு குடுத்திருவாங்களாம்,பத்து வருஷமா இலவசமா தான் சொல்லி குடுத்திட்டிருந்தாங்களாம்..அதுக்கப்புறம் ஸ்டூடன்ஸ்களே கம்பெல் பண்ணி பணம் குடுக்க ஆரம்பிச்சாங்களாம்...அதிலும் 75% சேரிட்டிக்காம்.

ஒவ்வொரு ஆசனத்தை சொல்லி குடுக்கும் போது அதனுடைய பயன் என்ன,அதை வாரத்திலே எத்தன நாள் செய்யணும்கறத விரிவா சொல்லி அதை நாங்க எந்தளவு புரிஞ்சிகிட்டோம்னு தெளிவு படுத்திட்டு தான் அடுத்த ஆசனத்தை சொல்லி குடுப்பாங்க.அதே போல மூச்சு விடுதல் பயிற்சி(பிராணாயாமா)சந்திரானுலோமா,சூர்யானுலோமா,நாடிசுத்தி,கபால பாத்தி..இதையே முறையா பயிற்சி பண்ணினா உங்கள எந்தவித உடல்,எண்ண சம்பந்த கெடுதல்களும் அண்டாதுன்னு சொல்லி ஒவ்வொரு தடவையும் மூச்சு ஓட்டத்தை கவனிக்க சொல்லுவாங்க..அது இப்ப ஒரு பிராக்டிசாவே ஆயிடுச்சு.

கூடவே டைகர் ப்ரீத்திங்,ரேபிட் ப்ரீத்திங்,டாக்(Dog)ப்ரீத்திங்,ஓம்காரா,ஆ காராவில் தொடங்கி வஜ்ராசனா,புஜங்காசனா,பவனமுக்தாசனா,மர்க்கட்டாசனா, சூர்யநமஸ்கார மற்றும் இன்னும் பல ஆசனங்களை சொல்லி குடுத்தாங்க..இப்படி ஒரு இன்வால்மெண்டோட நாங்க பத்து பேரும் கத்துகிட்டிருக்க...இன்ஸ்டியூட் காரங்க ஒரு குண்டை தூக்கி டீச்சர் தல மேல போட நாங்க தான் அவங்கள விட பதறிப்போனோம்..அது என்னன்னா இன்டியூட்டில ரெண்டு பேரு இருப்பாங்க...ஷிப்ட் போட்டுட்டு அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குவாங்க..அதுல ஒருத்தர் மொபைலை ஒரு நா அங்கயே மறந்து வைச்சுட்டு போயிட்டார்...அடுத்த நாள் வந்து பாத்தா அது அங்க இல்ல,யாரோ எடுத்திட்டு போயிட்டாங்க. காலைல 6 டூ 7 ஒரு பேட்ச்சும் 11 டூ 12 ஒரு பேட்ச்சும் யோகா இருக்கும்...நாங்க எல்லாம் செகண்ட் ஷிப்ட் பார்ட்டிக..அதனால காலைல வந்த பேட்ச்சுல தான் யாரோ எடுத்திருக்கணும்னு சொல்லி டீச்சரையே சந்தேகப்பட்டு திட்டிட்டார்...

அடுத்த நாளே வேற ஒரு டீச்சரை கூட்டிட்டு வந்து விட்டுட்டு இனிமே இவங்க தான் சொல்லி குடுப்பாங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க..எங்களுக்கு வந்த மனவேதனைக்கு இன்ஸ்டியூட்காரங்கள நல்லா காய்ச்சிட்டோம்..அவங்க என்னதான் மன்னிப்பு கேட்டாலும் மனசு ஆறவேயில்லை....ஆனா எங்க மனசை கூல் பண்ண ரெண்டே நாளில் யோகா டீச்சர் வந்தாங்க...அது என்னன்னா !!!!!!

Tuesday, March 16, 2010

பவித்ரா


Tamil Top Blogs

இவங்க தான் பவித்ரா,இனி ரெண்டு மாசத்தில் முதல் பிறந்த நாளை கொண்டாட போறாங்க.
டிசம்பர் மாதம் பெங்களூர் வந்தாங்க,எங்களுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கும் வீடு பாத்து குடி வந்தவங்க.இவங்க வேற யாரு இல்ல..என்னோட மாமா பையனோட பொண்ணு தான் இந்த குட்டி தேவதை.

அப்பா அனிமேஷன் ப்ரீலான்சராவும் அம்மா சிவில் இன்ஜினியராவும் வொர்க் பண்றாங்க.அதனால ஒரு நாளில் அதிக நேரம் என்னோட தான் இருப்பாங்க.ரொம்ப சூட்டி...அதிகமா அழுகையெல்லாம் இல்ல..பிடித்தது லேப்டாப்பும்,மொபைலும்.

என்னை பாத்ததும் கூப்பிடற வார்த்தை வாவூ..இதுக்கு என்ன அர்த்தம்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.அதே மாதிரி சாப்பிடற எந்த பொருளும் அவளோட மொழியில் மாம்பக்.எனக்கும் இனம் தெரியா பாசம் அவ மேலே...அம்மா தான் சொல்லிட்டிருக்காங்க ஏதோ ஒண்ணு போனஜென்மத்திலே விட்டு போயிருக்கும் அதான் இந்த ஜென்மத்திலே ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் பாசத்தை பொழியறீங்கன்னு.

இதையெல்லாம் ஏன் எழுதினேன்னு கேட்டாக்க..நல்ல காலத்திலேயே நாம எழுதறது ரொம்ப இப்ப இவங்க லேப்டாப்பை தொட விடறதுயில்லைன்னு நீங்களும் தெரிஞ்ச்சுக்கணும் இல்லையா அதான்.!!!!!!

பெ(ண்)ங்களூர் சார்பா எல்லாருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்.