Tuesday, February 17, 2009

Chain Mails to All

கடந்த கொஞ்ச நாளா இந்த மாதிரி வர்ற மின்னஞ்சல் பார்த்தாலே பயமா இருக்கு...இது அனேகமா எல்லாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்.

அதுவும் இந்த மாதிரி உலகமே பணவீழ்ச்சியால் நொடிச்சு, யாருக்கு எப்ப(வேலை)சீட்டு கிழியப்போகுதோனு கலக்கத்தில் இருக்கும் போது இந்த மாதிரி மின்னஞ்சல் வேற வந்து பயமுறுத்துது.அதுகூட 7லிருந்து 21பேர் வரைக்கும் அதை பார்ஃவேடு பண்ணனும்னு கண்டிஷன் வேற.இதை அனுப்பறதே நெருங்கிய வட்டங்கள் தான்.

இதை யாருப்பா கண்டுபிடிச்சது? இதை அனுப்பலைனா வேலை போயிரும்,குடும்பமே கஷ்டப்படும் அப்புறம் குடும்பத்தையே இழந்துருவீங்கனு சொல்லி வருது சாராம்சம். கடவுள் கூட மாடர்ன் டெக்னாலஜிக்கு மாறி அவரை நினைக்க வைக்க கேன்வாஷ் பண்றாரா?


கடவுளை எல்லாத்துக்கும் மேலான சக்தியாகவும்,பிரபஞ்சமே அவரோட இயக்கத்தில் இருக்கிறதாகவும்,தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு நம்புகிற நாம்,வீட்டில் செய்யற பூஜையில் இருந்து பெரிய அளவு வேண்டுதல் வரைக்கும் அவர் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து தீயதில் இருந்து காப்பாத்துவாருனு தானே செய்யறோம்.அப்படி இருக்கும் போது இந்த மாதிரி வர்ற மெயிலை அடுத்தவங்களுக்கு அனுப்பலைனு தண்டிப்பாரா?

இந்த மாதிரி மெயில்களை பார்க்கும் பொழுது, எனக்கு ஒரு கண் போனா உனக்கு ரெண்டு கண் போகட்டும்கிற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது.இப்ப இருக்கிற நிலைமையில்,நாளைய பொழுது வேலை இருக்குமா இருக்காதா குடும்பத்தை எப்படி கரைசேர்க்கறதுனு ஆயிரம் கவலைகளோடு இருக்கும் போது இந்த மாதிரி மெயிலை அனுப்பி தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீங்க?

இப்ப தேவை பயமுறுத்தல்கள் அல்ல. தன்னம்பிக்கை தரக்கூடிய உரைகள்,நட்பு கொடுக்கும் தைரியம், அரவணைக்கும் பண்பு, நான் என்றது போய் நாம் என்கிற ஒருங்கிணைப்பு இதெல்லாம் இருந்தாலே கடவுள் உன்னருகில் இருக்கிறார் என்று பொருள்.


தயவுசெய்து இந்த மாதிரி மெயில்களை பார்த்தாலே அழிச்சுடுங்க இல்லைனா சுற்றமும் நட்பும் அவங்க மனசில் இருந்து உங்களை அழிச்சுடுவாங்க.

Friday, February 6, 2009

பத்தாவது ஆண்டு விழா

அது என்ன பத்தாவது ஆண்டுனு தானே நினைக்கறீங்க...வேற ஒண்ணும் இல்லைங்க எங்க பொண்ணு படிக்கற நடனபள்ளியோட ஆண்டு விழா.ஜனவரி 30ம் தேதி இங்க இருக்கிற ஒரு ஸ்கூலில் வெச்சு எல்லா வித கலைநிகழ்ச்சிகளோட பிரமாதமா நடத்தினாங்க.

சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு.








2009 ஜனவரியின் முதல் வாரத்தில் டேன்ஸ் ஸ்கூலில் மீட்டிங் போட்டு கமிட்டி மெம்பர்சையெல்லாம் செலக்ட் பண்ணினாங்க..போனா போகுதுனு என்னையும் சேர்த்திகிட்டாங்க.அதுக்கப்புறம் இந்த வருஷம் அம்மாக்களுடைய டேன்ஸ்சை அறிமுகப்படுத்தனும்னு முடிவு பண்ணி எட்டு(நானும் கூட) பேரை தேர்ந்தெடுத்தாங்க.

எங்களோட ரிகர்சல் நல்லா நடந்ததோ இல்லையோ அரட்டையில் இருந்து குடும்பம் வரைக்கும் கச்சேரி நல்லா நடந்தது.ஒரு மாதமா தினமும் மூணு மணி நேரம் பிராக்டீஸ் இருந்தது.இதுக்கு மேல போன் வேற பண்ணி ஒரே டிஸ்கஷன் தான்.இந்த மாசம் வந்த போன் பில்லால் எட்டு வீட்டு ரங்குஸ்கள் மயக்கம் போடாத குறையா சுத்தறாங்க.

ஒரு மாசம் ஆட்டம் பாட்டுமா நேரம் போனதே தெரியலை.பதினைஞ்சு வருஷத்துக்கு பின்னாடி போன மாதிரி இருக்கு.புதிய நட்புக்கள் கிடைச்சிருக்கு. ரங்கமணிகளுக்கு ரொம்பவே பெரிய மனசுக தான் எங்களுக்காக ஒரு மாசமா அலைஞ்சதும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததும் பங்கெடுக்கவச்சதும்.