Tuesday, October 20, 2009

கருடா மால்

பெங்களூரின் முக்கியமான மால்களில் ஒன்று.இங்க பிராண்டடு(துட்டு பத்தி கவலை இல்லாத)கடைக மட்டும் தான் இருக்கும்.சில சைனா ஐட்டங்களும் இருக்கு..தரத்தை பத்தி சொல்ல வேண்டியது இல்லைனு நினைக்கறேன்.ஓரளவுக்கு எல்லாராலும் வாங்க முடியற துணிக்கடைனா வெஸ்ட்சைடை(Westside)சொல்லலாம்.பொழுது போக்கவும்,பார்க்கிங் பண்ண இடமும் கிடைச்சா நல்ல இடம்.



இது தான் கிரவுண்ட் ப்ளோர் எப்பவுமே டி.ஜே அல்லது வி.ஜேக்களோட ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகிட்டே இருக்கும்.போன வருஷம் சில ப்ரொபஷனல் டேன்சர்ஸ் கூட என் பொண்ணும் டேன்ஸ்(அப்படினு மனசை தேத்தி) பண்ணினா.குக்கீஸ்,ஐஸ்க்ரீம்,ஹோம்மேடு சாக்லேட்ஸ்,கார்ன்‘ஸ்.ப்ரெஸ் ஜீஸ்னு இந்த தளத்திலும் கிடைக்கும்.




முதல் தளத்திலிருந்து அஞ்சாவது வரைக்கும் போக எலவேட்டரும், எஸ்கலேட்டரும் படிகளும் இருக்கு.ரொம்பவே குறுகலான எஸ்கலேட்டர்..அதுக்கே கீழே மேலேனு செக்கியூரிட்டி.திருப்பதி தான் ஞாபகத்துக்கு வருது.



இது தீபாவளி கொண்டாட்டத்தின் விளக்குகள்.எல்லா கடைகளிலும் 10 முதல் 50% வரை தள்ளுபடி விற்பனை.டெம்பரவரி டாட்டூ போடும் கடைகளில் குட்டீஸ்களின் கலாட்டா...இந்த டிசைன் அந்த டிசைன்னு..அதுக்கு 50 மற்றும் 100 ரூபாய்.அடுத்தது புட்கோர்ட்..கொள்ளை விலைக்கு கொஞ்சமே கொஞ்சமே எல்லாம் சாப்பிடக்கிடைக்கும்.இங்க சில பேரு நாகரீகமா சாப்பிடற ஸ்டைலை பார்த்தா ஏன்தான் இப்படி சாப்பிடகூட நடிக்கறாங்களோனு தோணுது.

அதே போல ஒரு சாரர் கல்யாணத்துக்கு போற மாதிரியும் சில பேருங்க நமீதாவுக்கு தங்கச்சி மாதிரியும் வந்திருவாங்க..இதையெல்லாம் பார்க்கறதுக்கு ஒரு கூட்டம் எப்பவும் ஸ்குவாடு மாதிரி சுத்திகிட்டே இருக்கும்.இங்க (PUB)பப்பும் இருந்தாலும் ரொம்பவே சைலண்ட்டா தான் இருக்கு(அப்ப இருந்தது).வீடியோ கேம்ஸ், சினிமா ஹால்ஸ்,நகைக்கடை, காபி ஷாப்ஸ்னு அடுக்கிட்டே போலாம்.

இங்க Tresspassனு ஒரு பியூட்டி பார்லரில் பார்த்தது...நாலா பக்கமும் க்ளாஸ் வழியா உள்ள பாக்க முடியும்.ஒரு பக்கம் ஆணுக்கு முடி வெட்டு, அதுக்கு பக்கத்திலேயே பொண்ணுக்கு பெடிக்யூர் பண்ணிட்டு இருக்காங்க, இப்படி பல பேர் உள்ள.வெளியே பத்து பேர் அப்பாயின்மெண்ட்டோட வெயிட்டிங்.


இந்த வலை போடறதுக்கு ஒரு காரணம் இருக்கு போன வருஷம் ஒரு குழந்தை மேலேயிருந்து எட்டி பார்க்கும் பொழுது கீழே விழுந்து இறந்துவிட்டது..அந்த அசம்பாவிதத்துக்கப்புறம் இப்படி வலை போட்டு பாதுகாப்பை ஏற்படுத்திட்டாங்க.
Tamil Top Blogs

Friday, October 16, 2009

Coorg - கூர்க்

மலைகளும் காபிதோட்டங்களும் சூழ்ந்திருக்கும் இடம் தான் கூர்க்.பெங்களூரில் இருந்து 260 கிலோமீட்டரில் தூரத்தில் இருக்கும் ஒரு மாவட்டம். கர்நாடகத்தில் இருந்தாலும் கலாசாரம்,உணவு,மொழி,திருமணம் எல்லாம் வேறுபட்டு தான் இருக்கு.கன்னடா பேச தெரிந்தாலும் குடவா தான் அவங்க தாய்மொழி.இந்திய மொழிகளின் கலவையா இருக்கறதால ஓரளவுக்கு புரிஞ்சிக்க முடியும்.

மைசூர் வழியா போனா குஷால் நகர்,சொண்டிகுப்பா,மடிக்கேரி என்கிற மர்க்காரா போன்ற இடங்களில் தங்குவதற்கு தேவையான ஹோட்டல்களும், ஹோம்ஸ்டே மற்றும் ரிசாட்டுகளும் உள்ளது.ஹோம்ஸ்டே தான் இங்கு மிக பிரபலம்.சின்ன சின்ன ஹட்டிலிருந்து பெரிய பங்களா வரைக்கும் வாடகைக்கு கிடைக்கும், தேவையானால் சமையல்காரரும்,நாமே சமைக்கும் வசதியும் இங்கு உண்டு.



நாங்க தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் ஒரு பக்கத்து தோட்டம் தான் மேலேயிருக்கும் போட்டோ.



இந்த இடத்துக்கு பேரு ராஜா சீட்.இங்க ஒரு சின்ன மண்டபம் இருக்கு ராஜா ராணி இருந்த காலத்தில் தினமும் சூரிய அஸ்தமனத்தை பார்க்க இங்க வந்ததால இந்த பேரும் வந்திருச்சு.பனிமூட்டத்தால் போட்டோ சரியா எடுக்கமுடியலை.



இது பாகண்டேஸ்வரர் கோவில் முகப்பு.சிவன் தான் இங்கு முக்கிய தெய்வம்..வழிபாடு முறைகள் அப்படியே கேரளாவை ஒத்து இருக்கு.இந்த கோவிலுக்கு எதுத்தாப்பலேயே காவிரி ஆறும் ஓடுது.இந்த ஊரை சேர்ந்தவங்க அவங்க குடும்பத்தில் யார் இறந்தாலும் இங்க வந்து காவிரியில் கரைச்சுட்டு சிவன் கோவிலில் பூஜை செய்வாங்களாம்.தலைக்காவேரி போகும் வழியில் இந்த கோவில் இருப்பதால் இங்க தான் முதல் விசிட்.



தலைக்காவேரி போகும் வழியில் எடுத்த போட்டோ இது..மதியம் 12 மணிவாக்கில் இப்படி இருந்தா விடிகாலையில் எப்படி இருந்திருக்கும்?



இது தலைகாவேரியின் அடிவாரம்.இதுக்க மேல இருக்கிற எல்லா இடங்களிலும் போட்டோவோ வீடியோவோ எடுக்ககூடாதுனு அறிவிப்பு இருந்ததால எதுவும் எடுக்கலை.எனக்கு இந்த இடத்துமேல ஒரு ஈர்ப்பும் இருக்கு..சின்ன வயசில்,பட பேரு ஞாபகம் இல்லை. சிவாஜியும் மஞ்சுளாவும் சேர்ந்து இங்க குறிஞ்சி மலர்களேனு பாடுவாங்க..அதையே எதிர்பார்த்து தான் போனேன் ஆனா இப்ப மார்பிள் போட்ட கோவிலை தான் பார்க்க முடிஞ்சது.

அடிவாரத்தில் இருந்து 20 படிகள் தான் இருக்கும்,பனிமழை பொழியறதால காலு அதுக்கே உணர்வில்லாம போயிடுது..ஆனா அங்க இருக்கும் பூஜாரிகள் பஞ்சகச்சம் ஒரு அங்கவஸ்திரத்தோட இருக்காங்க.இங்கயும் தட்டு நிறைய காசுக்கு தான் ஆரத்தி கிடைக்கும்.காவேரி தொடங்கிற இடமானதால் ஒரு வித சிலிர்ப்பு உண்டாகுது.அந்த தண்ணியை யாரும் தொட அனுமதியில்லை,டிரம்களில் தண்ணி நிரப்பி வெச்சிருக்காங்க அதையே தான் எடுத்து குளிக்கவோ,குடிக்கவோ முடியும்.



இது அபி (ABBI) அருவி.பத்தடிக்கு முன்னாடியே வேலி போட்டு இருக்கு.கார்டும் இருக்கறதால எல்லை தாண்டி எங்கயும் போக முடியாது.கொள்ளை அழகு..விட்டு வர மனசு கொஞ்சம் வலிக்கும்.



இது அரபிக் காபியின் செடி.இந்தியன் காபி கொட்டைக்கு விலை கம்மி அதனால் அதை விட மகசூலும் விலையும் தருகிற இந்த காபி கொட்டைக்கு ஏகப்பட்ட டிமாண்ட்.






இது திபெட்டியன் காலனியில் இருக்கும் புத்தா தங்க கோவில்.ஒரு கிராமம் முழுதும் இவங்க குடியிருப்பு. எங்கு காணினும் புத்த பிட்சுக தான் அதுவும் நாலு வயசிலிருந்து.குட்டி பிட்சுக அழகோ அழகு.ரொம்பவே அமைதியான புத்த மடம்.

எல்லா அவசரகதியை விட்டு அமைதியா இருக்க ஏத்த இடம்.வித்தியாசமான உணவுகள்..கடுபூ என்கிற கொழுக்கட்டை,தரிப்புட்டு, கீமா தோசை,அட்டகாசமான காபி.மியூசியம்,இஸ்லாமிய முறைப்படி கோபுரம் இருக்கும் சிவன் கோவில்,அரண்மனை இன்னும் சில பல மிஸ் பண்ண தோணாத இடங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்.
Tamil Top Blogs