Thursday, December 17, 2009

ஆண்டு ஒன்று




ஆஹா நானும் ஒரு வருஷம் கடந்துட்டேனே!!!!எழுத நினைச்சது நிறைய ஆனா எழுதினது ரொம்ப குறைவு.



Tamil Top Blogs

Tuesday, December 8, 2009

ஆழப்புழா - ஒரு பயணம் 3

Tamil Top Blogs

அடுத்த நாள் காலையில் எல்லாரும் டைம்க்கு அங்க இருக்கணும்னு பிளான் பண்ணினா, ராத்திரியிலிருந்தே நல்ல மழை இருந்தாலும் எல்லாரும் ரெடியாயிட்டோம்.ஒரே கார்ல இத்தன பேரும் போகமுடியாதே...அதனால ரெண்டு டிரிப் போகலாம்னு..ரெண்டு டிரிப்பா போய்சேர்ந்தோம்.அங்க போனா பூஜைக்குண்டான எந்த அறிகுறியையும் காணோம், கோவிலுக்கு பக்கத்தில் குடியிருக்கும் மூணு பேர் மட்டும் தான் இருந்தாங்க.

அவங்ககிட்ட கேட்டா வேற ஒரு குடும்பத்தில இதே மாதிரி பூஜை நடக்குதுன்னும் அதை முடிச்சிட்டு இங்க வருவாங்கன்னும் சொன்னாங்க.சரி எத்தன நேரந்தான் சும்மா இருக்கறதுன்னு ஊரையாவது சுத்தி பாக்கலாம்னு அண்ணியும் நானும் பசங்களோட கிளம்பிட்டோம்.சுத்தியும் நெல்வயலும் அங்கங்க வீடுகளும்,தென்னந்தோப்பும்,மாந்தோப்பும்,வீடுகளில் வாத்துபண்ணையும்,மாடுகளுமா ஒரு நல்ல கிராமத்தை பார்க்கமுடிஞ்சது.

இப்படி ஊரை சுத்தி பாத்துட்டு வந்தோம்..அப்ப தான் பூஜைக்குண்டான சாமான்களோட பூசாரியும் வந்தார்.அவரே தான் பொங்கல் பாயாசம் எல்லாம் செய்வாராம் அதனால அந்த பக்கம் யாரையும் விடலை...சாப்பிட்டா மட்டும் போதும்னா அதுக்கு ரெடியா தான் இருக்கேன்னு மனசுக்குள்ளே சொல்லிகிட்டேன். இதுக்குள்ள சாமிகளுக்குக்கு எண்ணெயால அபிஷேகம் நடத்தி மஞ்சளை தூவி விட்டாங்க அதுக்கு மேல உப்பையும் போட்டு அதுக்கப்புறம் தான் பூ அலங்காரம் பண்ணினாங்க.

சாமிக எல்லாம் சிமெண்ட் மேடை மேல இருந்தது அதனால அஞ்சு குத்துவிளக்கை கீழே வச்சி,விளக்குக்கு பக்கத்திலே அஞ்சு வாழையிலை போட்டு அது மேல வாழைதண்டையும்,பாக்கு மரத்தோட பாளையும் கட் பண்ணி சின்ன சின்ன துண்டுகளும் அதுகூட பாக்கு மரத்தோட குருத்துகளையும் எல்லா இலையிலயும் வெச்சிருந்தாங்க.அதுக்குள்ள பூசாரி பாயாசம் எல்லாம் ரெடி பண்ணிட்டு, ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சதூளையும்,அரிசிப்பொடி,சந்தனம்,கொஞ்சம் பாக்கு குருத்தையும் ஒண்ணா கலக்கி எடுத்துகிட்டார்.

அதோட வித விதமான பூக்களும்,சின்ன சின்ன குச்சிகளில் வெள்ளை துணியில் தீப்பந்தம் மாதிரியும்,பெரிய பாத்திரத்தில் பாலும்,ஒரு குடம் தண்ணி,கற்பூரதட்டு ஊதுபத்தி,நைவேத்தியங்களோடு இந்த இழைகளுக்கு முன்னால ஒரு பலகை போட்டு உட்கார்ந்து பூஜை பண்ண ஆரம்பிச்சார்.