Sunday, November 29, 2009

ஆழப்புழா - ஒரு பயணம் 2

Tamil Top Blogs
அண்ணா பின்னாடியே வீட்டுக்கு போனா அக்காவும்,மாமாவும் அவங்க பசங்களும் வீட்டு வாசலிலேயே காத்துகிட்டு இருந்தாங்க.நல விசாரிப்பெல்லாம் முடிஞ்சு கொண்டுட்டு போன பொருட்களையெல்லாம் பங்கியும் கொடுத்தாச்சு.அப்ப அக்கா இங்க வாயேன் உனக்கு ஒரு சர்ப்பரைஸ் இருக்குன்னு வீட்டுக்கு பின்னாடி கூட்டிட்டு போனா...ஆஹா அங்க பாத்தா ரெண்டு தூரி (ஊஞ்சல்) இருந்தது..இதும் மேலயும் எனக்கு எப்பவும் ஒரு கிரேஸ்,விடுவமா உடனே ஓடி போயி நானும் பொண்ணும் ஆட கேக்கவா வேணும்.

அப்படியே அக்கம் பக்கம் இருக்கறவங்க விசாரிக்க வந்தாங்க. அந்த ஊர்ல ஒரு பழக்கம் எப்ப ஊருக்கு திரும்ப போறங்கறது தான் முதல்ல விசாரிப்பாங்க அப்புறம் மிச்ச கதையையெல்லாம் பேசுவாங்க,அப்படி தான் இந்த தடவையும் நடந்துச்சு.அப்படியே அண்ணா, அக்கா கூட பழைய கதைகளை பேசி பேசி அன்னைக்கத்த பொழுது போயிடுச்சு.அடுத்த நாள் எங்க அத்தை மகன் வீட்டுக்கு போனோம் இப்ப 75 வயசுக்கும் மேல இருக்கும்.அவர் தான் அப்பா குடும்பத்தில் எங்க தலைமுறையில் மூத்தவர் அதனால அவர் மேல எல்லார்க்கும் மதிப்பும் மரியாதையும் ஜாஸ்தி.

அவர் அன்னைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை சொன்னார் அதாவது எங்க தலைமுறையில் யாரும் குடும்ப கோவிலுக்கு போறதில்லை, பூஜைகளும் செய்யறதில்லைனும்,அதற்காக அவரோட சேர்ந்து இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க சில பேரும் ஒரு கமிட்டி ஏற்படுத்தி இந்த குடும்பத்தை சேர்ந்தவங்களை கண்டுபிடிச்சு பேமிலி ட்ரீ உருவாக்கபோறோம்னு சொன்னார் எங்களுக்கும் அதை கேட்டு சந்தோஷமாயிடுச்சு..புது உறவுகள் கிடைக்குமேனு தான். அப்படியே எங்க குடும்பத்தை சேர்ந்த எல்லாரோட ஊரும் பேரும் இன்னும் சில விவரங்களையும் கொடுத்தோம்.

அதுக்கு அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரம் வர்றதாகவும் அன்னைக்கு எங்க குடும்ப சாமி நாகராஜாவுக்கு பூஜை பண்ண முடியுமானு கேட்டார்..உடனே சரினு சொல்லிட்டோம்.அதுக்குண்டான பணத்தையும் குடுத்துட்டு எத்தன மணிக்கு அங்க இருக்கணும்னு விசாரிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பினோம்.

Thursday, November 19, 2009

ஆழப்புழா - Allapuzha ஒரு பயணம் 1

Tamil Top Blogs
ஆழப்புழாவுக்கு டிரெயின் டிக்கெட் ஆன்லைனில் புக் பண்ணவேண்டியது ஒரு வாரம் கழிச்சு கேன்சல் பண்ணவேண்டியது இப்படியே மூணு மாசமா நடந்திட்டிருந்தது..வீட்ல எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க,சீக்கிரமே ஆன்லைன் டிரான்ஷேக்ஷ்னை பேங்கே நிறுத்திரும்னு..சரி போனா போகுதுனு நவம்பர் 4லுக்கு புக் பண்ணிட்டேன்.கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் ரொம்ப ஈசியா டிக்கெட் கிடைச்சது இப்ப ஒரு மாசம் முன்னாடினா கூட வெயிட்டிங் லிஸ்ட்ல தான் கிடைக்கும்.

அப்படி என்ன தான் அந்த ஊர்ல இருக்குனு கேட்டா, என்னோட அப்பா அம்மாவுக்கு சொந்த ஊர் இது.என்னை தவிர அண்ணன்களும் அக்காவும் பிறந்த ஊரும் இதுதான்.சொந்தபந்தமும்,அக்காவும் அங்க இருக்கறதால எங்களுடைய வெகேஷன் ஸ்பாட்ல அதுக்கு முக்கியத்துவம் ரொம்பவே.இந்த தடவை பெரியண்ணா குவைத்திலேயிருந்து வந்திருக்கறதால அவரை பாக்கறதுக்காக தான் இந்த பயணம்.அங்க போய் சேர்றவரைக்கும் பத்து போன்காலாவது வந்திருக்கும்..இந்த தடவையாவது ஊருக்கு வந்திருவே தானேனு.

பெங்களூரில் இருந்து 694 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு, 12 மணியிலிருந்து 16 மணி நேர பயணம்.நாங்க (நானும் மகளும் தான்) போனது கொச்சுவெளி (இது ஒரு ஊர் பேர்..இப்ப தான் தெரிஞ்சது இப்படியெல்லாம் ஒரு ஊர் இருக்குனு)எக்ஸ்பிரஸ்,இங்கிருந்து சாயாங்காலம் அஞ்சேகாலுக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம்,பங்காரபேட் ஜோலார்பேட் ஈரோடு,கோவை பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் அடுத்தது ஆழப்புழைக்கு அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு போய் சேர்ந்தோம்.

எனக்கும் இந்த ஊர் ரெயில்வே ஸ்டேஷனுக்கும் ரொம்பவே ராசி..இங்க இருக்கறதே ரெண்டு பிளாட்பார்ம்,அதுல ஒண்ணாவது பிளாட்பார்ம் மெயின் கேட்கிட்டயும் ரெண்டாவது பிளாட்பார்ம் அதுக்கு பின்னாடி இருக்கறதால சின்ன பிளைஓவர் வழியா தான் மெயின் கேட்டுக்கு வரணும்.என்னை தவிர வீட்ல இருந்து யார் போனாலும் முதல் பிளாட்பாரம்ல தான் டிரெயின் நிக்கும் எனக்கு எப்பவும் ரெண்டாவது.எப்ப அங்க போனாலும் யாராவது கூட்டிட்டு போறதுக்கு வருவாங்க ஆனா நா மூட்டைமுடிச்செல்லாம் தூக்கிட்டு மெயின்கேட்டுக்கு வந்தபிறகு தான் அவங்க வந்துசேர்வாங்க.

இந்த தடவையும் அப்படிதான்,அண்ணாவும் அண்ணியும் பெட்ரோல் போட்டுட்டு வர்றதுக்கு லேட்டாயிடுச்சுனு ஓடி வந்தாங்க..அப்ப எனக்கு வந்த கடுப்பில...என்ன பண்ணமுடியும் அண்ணாவாச்சே.சிரிச்சிட்டே அவங்க பின்னாடி போயிட்டேன்.