Friday, September 4, 2009

மைசூர் டிரிப்

Tamil Top Blogs

டூர் போறதுனாலே எல்லார்க்கும் சந்தோஷம் தானே..அப்படி நினைச்சு தான் மைசூருக்கு போலாம்னு தயாரானோம்.போனது 2006 மே மாதத்தில்.ரெண்டு நாள் டிரிப்புக்கு தேவையானதை எடுத்துகிட்டோம்.விடிகாலை 5 மணிவாக்குல எங்க பிரயாணத்தை தொடங்கினோம்.நாலு மணி நேரத்தில் ஸ்ரீரங்கப்பட்னா போய் சேர்ந்தோம்,திப்பு சிறைச்சாலை,காவேரி ஆறு, ரங்கநாதசாமி கோவில் எல்லாம் சுத்தி பார்த்துட்டு,அங்கிருந்து நேரா மிருக காட்சி சாலை போனோம்.பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க கூடாதுனு முகப்பிலேயே பேப்பர் கவர்களை விநியோகம் செய்யறாங்க.


நாங்க கொண்டு போன கவர்களை குடுத்துட்டு பேப்பர் கவர்களோடு உள்ள போனோம்.விலங்குகளை பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு...சுதந்திரமில்லா வாழ்க்கை.சுத்தி பார்த்துட்டு சாப்பாட்டு நேரத்துக்கு வெளியே வந்தோம்.போற வழியில் சாப்பாடை முடிச்சிட்டு ஹோட்டல் ரூம் தேட ஆரம்பிச்சோம்.ரெண்டு மூணு இடங்களில் ரூம் காலியில்லைனு சொல்ல எங்க தேடுதல் வேட்டை தொடர்ந்தது.கடைசியில் ஒரே ஒரு ரூம் மட்டும் நாலு பெட்டோட இருக்க ஒரு நாள் தானேனு எடுத்துகிட்டோம்.

ரூமில் கொஞ்ச நேர ரெஸ்ட்டுக்கு பிறகு மைசூர் பேலஸை பார்க்க கிளம்பினோம்.சின்ன வயசில பார்த்ததுக்கும் இப்ப பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.பல அறைகள் பாதுகாப்பு கருதி பூட்டியிருந்தது.அதுனால சுவாரஸ்யம் கொஞ்சம் கம்மியாயிருச்சு.அங்கயும் இங்கயுமா சுத்தி எட்டு மணிக்கு ரூமுக்கு போயிட்டோம்.அடுத்த நாளும் சுத்த போகணுமே அதனால சீக்கிரம் சாப்பிட்டு தூங்கிடலாம்னு நினைச்சு பக்கத்தில் இருந்த ஹோட்டலில் ஆர்டர் கொடுத்தோம்.வந்தது,சாப்பிட்டாச்சு,தூங்கியும் ஆச்சு.

விதி அப்பப்ப சதி செய்யுமாமே..முதல் நாள் டின்னர் வேலையை காமிக்க ஆரம்பிச்சுது.எப்படியோ சமாளிச்சு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு போனோம்,அங்க பார்த்தாக்க ஒரே கூட்டம்..எதுக்கு உள்ள போயிட்டு ஆத்தர அவசரம்னா வெளிய வரமுடியாதுன்னு கொடி மரத்துகிட்டேயே தரிசனம் பண்ணிட்டோம்.அப்படியே நந்தியையும் பார்த்துட்டு சோம்நாத்பூர் போலாம்னு கிளம்பினோம்.என்னை தவிர எல்லாரும் ஓரளவு நார்மலாயிட்டாங்க.எனக்கோ ஒரே டென்ஷன்..போறபக்கமெல்லாம் பாத்ரூம் இருக்கணுமே!!!.

சோம்நாத்பூரில் கட்டிடகலை பெருமை வாய்ந்த கோவில் இருக்கு.அதை பார்க்க போற வழியில் அண்ணி சொன்னாங்களேனு ரெண்டு மாத்திரை(பேர் வேண்டாமே)வாங்கி சாப்பிட்டேன்.அங்க போயி சேர்ற வரைக்கும் பிரச்சனை ஒண்ணும் இருக்கலை.நல்ல வெயில் காலம் வேற..அங்க போனவுடனே இளநி வாங்கி எல்லாரும் குடிக்க நா வேண்டானு சொல்ல..கட்டாயபடுத்தி குடிக்கவெச்சாங்க.விதி விடாது போல இருக்கு.தலை சுத்தல் ஆரம்பிச்சிருச்சு.அந்த கோவிலை அரை மயக்கத்திலே தான் பார்க்கமுடிஞ்சது.

திரும்பவும் மைசூர்..இனியும் சில இடங்க பார்க்கவேண்டியது இருந்துச்சு.சரினு கிளம்பியாச்சு..அப்ப பாத்து குடிச்ச தண்ணியெல்லாம் நெஞ்ச வரைக்கும் வந்து நிக்குது...வரட்டுமா வேண்டாமானு...அடிக்கடி வந்து படுத்திட்டு தான் போச்சு.சுத்தி பார்க்க போன இடத்திலெல்லாம் நா மட்டும் கார்லேயே தான் இருந்தேன்..போகத்தான் முடியுமா?சரினு கிளம்பி வீட்டுக்கு வர்ற வழியில் ச்சன்பட்டனா னு ஒரு ஊரு..அங்க மர சாமான்கள் ரொம்ப பிரபலம்..அண்ணி மகளுக்காக விளையாட்டு குதிரை வண்டி வாங்கியே ஆகணும்னு வாங்கி அதையும் சீட்டுக்கு நடுவில் வெச்சுட்டு வீட்டுக்கு வரதுக்குள்ளே டிஹைரேஷன் ஆகி ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டியதாயிருந்தது.

ஆசை ஆசையா கிளம்பிபோயி நொந்து நூலாகி வந்தது தான் மிச்சம்..இப்ப டிரிப்பை பத்தி யாராவது பேசினா மைசூர் தான் ஞாபகத்துக்கு வருது.