Saturday, June 13, 2009

சின்ட்ரல்லாவும் என் மகளும்

Tamil Top Blogs
தினமும் தூங்குவதற்கு முன்னால் மகளுக்கு கதை சொல்லனும்.அதுவும் என்ன கதை சொல்லணும்கறதையும் அவளே தான் செலக்ட் பண்ணுவா...அப்படி இருக்கும் போது ஒரு நாள் சின்ட்ரெல்லா கதை சொல்லற நாளா இருந்தது.சரினு ஆரம்பிச்சேன் ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா அவங்களுக்கு ஒரே பெண் குழந்தை அது ரொம்பவும் அழகா இருந்ததால அதுக்கு பேரு சின்ட்ரெல்லா.

கொஞ்ச நாள் கழிச்சு அவளோட அம்மா செத்து போயிட்டாங்க அப்புறம் அவளோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாரு,அப்பத்திலிருந்து சின்ட்ரெல்லாவுக்கு வாழ்க்கையை கஷ்ட்டமாயிடுச்சு.சரியான சாப்பாடு இல்ல நல்ல துண்மணிக இல்ல ஸ்கூலுக்கும் போகாம வீட்டு வேலையே கதினு கிடந்தா. சித்திக்கு பயந்துட்டு அப்பாவும் சப்போர்ட் பண்ணலை.

சித்தியோட பொண்ணுகளும் அவளை கொடுமைபடுத்தீனாங்க.இருந்தாலும் மனவேதனையோட எல்லா வேலைகளையும் செஞ்சு கொடுத்தா.நேரம் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவோட படத்தை எடுத்து வெச்சுகிட்டு மனசிலிருக்கறதையெல்லாம் சொல்லி அழுவா.அப்புறம் இராஜகுமாரன் வந்ததும் கடைசியில் அவளோட செருப்பை கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணினதையும் சொல்லி கதையை முடிச்சேன்.

இதை கேட்டுகிட்டிருந்த ரங்கமணி மக கிட்ட சொன்னார் நானும் சின்டரெல்லாவும் ஒரே மாதிரி சித்தி கிட்ட வளர்ந்தோம்.அதுல வர்ற மாதிரியே உங்கம்மாவும் எனக்கு ஷீ வாங்கி தந்துதான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டானு சொன்னார்.ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சா..அடுத்த நொடியே அவங்கப்பாவை பார்த்து, சித்தப்பாவை பாரு இண்டிகா காரை வாங்கிட்டு தானே சித்தியை கல்யாணம் பண்ணிகிட்டாரு..உனக்கு புத்தியே இல்லை இல்லைனா ஒரு ஷீக்காக இந்த அம்மாவை கல்யாணம் பண்ணியிருப்பியானு?? கேட்டா பாருங்க.எங்களுக்கு வாய் அடைச்சுபோச்சு.

அதுக்கப்புறம் அவளுக்கு (அம்மா இல்லாத)அப்பா கிட்டே ரொம்ப பிரியமும் மரியாதையும் கூடிடுச்சு.

Friday, June 5, 2009

முதல் தொடர்!!!!!

Tamil Top Blogs

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் தந்த லதானந்த் சாருக்கு நன்றி.


1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அது எனக்கு தெரியாது ஆனா என்னோட சின்ன மாமா வெச்ச பேரு.எனக்கு பிடிக்காத பேர் தான், வெச்சிட்டாங்களே.....போகட்டும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இன்னைக்கு கூட தான் அழுதேன்.அவர் கோபப்பட்டாலே வந்துருது.அப்பா நினைவு வரும் போதும் அழுகையும் வந்திடும்.


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஸ்கூலில் படிக்கும் போது பிடிச்சுது. இப்ப கையெழுத்து போட, பொண்ணுக்கு வீட்டு பாடம் எழுத மட்டும். பொண்ணு திட்டுவா இப்படிதான் எழுதறதானு.

4. பிடித்த மதிய உணவு என்ன?

ரசம் கலந்த தயிர் சாதம் with கோபிமஞ்சூரியன், சிக்கன் வறுவல்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா. ஆனா மெயின்டெய்ன் பண்ண தான் ஒரே பாடா கிடக்கு.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவி தான் முதல் சாய்ஸ்.2002 ல் குற்றாலத்துக்கு போனது..அதுக்கப்புறம் இது வரைக்கும் அருவி குளியல் கிடைக்கலை.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எல்லாமே தான். வீட்ல ஸ்கேனர்னு பேரு கூட இருக்கு.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

புடிச்ச விஷயம்
பிடிவாதம், பாரபட்சம் முடிஞ்சளவு காட்டாம இருக்கறது.

புடிக்காத விஷயம்
பர்பெக்ஷனை எதிர்பார்க்கறது.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

புடிச்ச விசயம் எனக்கு தேவையான சுதந்திரம் குடுக்கறது.

புடிக்காத விசயம். சோம்பேறிதனத்தை.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என்னுடைய காணாம போன நண்பர்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பர்ப்பிள் வித் பேபி பிங்க்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

கார்ட்டூன் சேனல் சத்தம் கேக்குது.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஊதா

14. பிடித்த மணம்?

மகிழம் பூ

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

யாராவது உதவி பண்ணுங்களேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

விலங்குகளை பத்தி வர்ற எல்லா பதிவும்.

17. பிடித்த விளையாட்டு?

கம்யூட்டரில் சாலிட்டர், நிஜத்தில் ஸ்னோ பவுலிங்.

18. கண்ணாடி அணிபவரா?

இப்போதைக்கு இல்லை.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

புரியாத கதைகள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

பொம்மலாட்டம்.

21. பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

மகளின் பாட புத்தகம் தான்.
23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

எப்பாவது போர் அடிக்கும் போது.


24. பிடித்த சத்தம் ?

விடிகாலை குயிலின் சங்கீதம்.

பிடிக்காத சத்தம்?

அதீத இரைச்சல் எதுவாக இருந்தாலும்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?

துபாய்.


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கொஞ்சம் இருக்கு, அது பிரிடிக்ஷன்..இப்ப தான் குடும்பத்துக்குள்ளேயே நம்ம ஆரம்பிச்சிருக்காங்க.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

துரோகிகளை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஆஸ்திரேலியா. இப்ப டீச்சர் இருக்கற ஊரும்.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நானாகவே.

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ஷாப்பிங்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடு.