Tuesday, March 16, 2010

பவித்ரா


Tamil Top Blogs

இவங்க தான் பவித்ரா,இனி ரெண்டு மாசத்தில் முதல் பிறந்த நாளை கொண்டாட போறாங்க.
டிசம்பர் மாதம் பெங்களூர் வந்தாங்க,எங்களுக்கு பக்கத்திலேயே இவங்களுக்கும் வீடு பாத்து குடி வந்தவங்க.இவங்க வேற யாரு இல்ல..என்னோட மாமா பையனோட பொண்ணு தான் இந்த குட்டி தேவதை.

அப்பா அனிமேஷன் ப்ரீலான்சராவும் அம்மா சிவில் இன்ஜினியராவும் வொர்க் பண்றாங்க.அதனால ஒரு நாளில் அதிக நேரம் என்னோட தான் இருப்பாங்க.ரொம்ப சூட்டி...அதிகமா அழுகையெல்லாம் இல்ல..பிடித்தது லேப்டாப்பும்,மொபைலும்.

என்னை பாத்ததும் கூப்பிடற வார்த்தை வாவூ..இதுக்கு என்ன அர்த்தம்னு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.அதே மாதிரி சாப்பிடற எந்த பொருளும் அவளோட மொழியில் மாம்பக்.எனக்கும் இனம் தெரியா பாசம் அவ மேலே...அம்மா தான் சொல்லிட்டிருக்காங்க ஏதோ ஒண்ணு போனஜென்மத்திலே விட்டு போயிருக்கும் அதான் இந்த ஜென்மத்திலே ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் பாசத்தை பொழியறீங்கன்னு.

இதையெல்லாம் ஏன் எழுதினேன்னு கேட்டாக்க..நல்ல காலத்திலேயே நாம எழுதறது ரொம்ப இப்ப இவங்க லேப்டாப்பை தொட விடறதுயில்லைன்னு நீங்களும் தெரிஞ்ச்சுக்கணும் இல்லையா அதான்.!!!!!!

பெ(ண்)ங்களூர் சார்பா எல்லாருக்கும் யுகாதி வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment